உள்ளூர் செய்திகள்

பள்ளி முன்பு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு

Published On 2022-06-18 08:15 GMT   |   Update On 2022-06-18 08:15 GMT
  • தேவகோட்டையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உஞ்சனை அரசு ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்.

அது படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 13 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிகள் மூடும் நிலையில் இருந்தததால் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயன்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி 6 முதல் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச மாக ஸ்மார்ட் போன், டேப் தருவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் தருவதாக தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் லாசர் அறிவித்துள்ளார். மேலும் மங்கலம் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்களுக்கு ஆட்டோ வாடகையும் ஆசிரியர்களே வழங்குகின்றனர். உயர்நிலைப்பள்ளியில் இணையத்துடன் கணினி வசதி, புரெஜெக்டர் போன்றவற்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.

ஆசிரியர்கள் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள் மாலை அணிவித்து வர வேற்கின்றனர். தற்போது இரு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்துள்ளது. மேலும் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News