உள்ளூர் செய்திகள்

பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைப்பு

Published On 2023-03-17 08:40 GMT   |   Update On 2023-03-17 08:40 GMT
  • இளையான்குடி அருகே பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழா தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் விழா கல்வெட்டில் மனைவி பெயர் இல்லாததைக்கண்டு ஆத்திரம் அடைந்தார்.

அதன் பின்னர் அவர் அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கினார். இதுகுறித்து விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரி லோகராஜ் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News