உள்ளூர் செய்திகள்

இந்திய மருத்துவ கழக மண்டல மாநாடு

Published On 2023-05-22 14:22 IST   |   Update On 2023-05-22 14:22:00 IST
  • இந்திய மருத்துவ கழக மண்டல மாநாடு நடந்தது.
  • காரைக்குடி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

காரைக்குடி

இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவ மனைகள் பிரிவின் மண்டல மாநாடு மற்றும் கருத்தரங்கு காரைக்குடியில் நடந்தது. ஐ.எம்.ஏ. காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். மாநில தலைவர் செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது:-

இந்த கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் இருந்து மருத்து வர்கள் கலந்து கொண்டு உள்ளனர். காப்பீடு வசதி, மருத்துவக் கழிவு மேலாண்மை, சிறந்த மருத்துவ சேவை வழங்குவது உள்பட பல்வேறு தலைப்பு களில் வல்லுநர்கள் பேசி னர். சிறு மருத்துவமனை களின் நலன் மற்றும் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் விதமாக அரசிற்கு சில கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறை வேற்றியுள்ளோம். அவசர சிகிச்சை அறையில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவ மனைகளுக்கு ஒற்றை சாளர முறையில் தீ லைசென்ஸ், பில்டிங் லைசென்ஸ், சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து அனுமதி களையும் ஆன்லைன் மூலம் மருத்துவமனை அனுமதி யின்போதே வழங்க வேண்டும். மேலும் அவை களை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.மருத்து வர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் மெடிக்கல் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ அறிவுரை வழங்கு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2010-ம் வருடம் முன் கட்டப்பட்ட மருத்துவமனைகளுக்கு இப்போதுள்ள கட்டிட விதிமுறைகளை கோரும் சில உள்ளாட்சி அமைப்பு களின் மீது அரசு கவனம் செலுத்தி புதிய வழிகாட்டு தலை பிறப்பிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவர் காமாட்சி சந்திரன் விருந்தினர்களை கவுரவித்தார். ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செய லாளர் குமரேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News