முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
- முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021-22 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 மற்றும் 3-ம் மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கி னார். பள்ளி ஆசிரியர் செல்வத்துரை முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்று பேசினார்.
12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற பாலன், 2-ம் இடம் பெற்ற சிபிராஜ், மாணவர்களான லண்டன் மருத்துவர் சரவண வேல், வடிவேலன், சேவுக மூர்த்தி, பொன் சரவணன், பாலசீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல வருடங்களாக முன்னாள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படித்து தொழில் அதிபராக உள்ள கணேசன், ஆசிரியர் முத்துப்பாண்டி, தென்றல், பாலசுப்பிரமணியம், முத்து பிரகாஷ், பிரவீன், குமார், மூர்த்தி, தனசேகரன் உள்ளிட்டோரின் பெரும் முயற்சிக்கு இடையே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.