உள்ளூர் செய்திகள்

பவானி அன் கோ புதிய கிளையை உரிமையாளர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி பவானி ஆகியோர் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா

Published On 2023-06-02 08:15 GMT   |   Update On 2023-06-02 08:15 GMT
  • எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா நடந்தது.
  • நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

காரைக்குடி

மதுரையில் ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், லாமி னேட்ஸ், ஹார்டுவேர் பொருட்களின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனமான எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ நிறுவனம் மதுரை, கோவை, சிவகாசி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து தனது நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

இதனை நிர்வாக இயக்குநர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி.பவானி ஆகியோர் தலைமையேற்று திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி.சிவராஜ் மணிமாலா மற்றும் எம்.ஆர்.எஸ்.பி.வசந்தராஜ் கீர்த்திகா தம்பதியினர் வரவேற்றனர்.

மதுரை பி.எஸ்.எம்.என் மாரியப்ப நாடார் அன் கோ உரிமையாளர் கணேசன் பொற்செல்வி தம்பதியர் மற்றும் மதுரை எஸ்.வி.எஸ் வெற்றிவேல் நாடார், கோந்து கடை உரிமை யாளர் மோகன் செல்வி தம்பதியர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

இதில் காரைக்குடி கட்டுமான பொறியா ளர்கள் சங்க நிர்வாகிகள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், ஆர்க்கி டெக்சர் வல்லு நர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News