புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை
- புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
- இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.