உள்ளூர் செய்திகள்

முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு-குறைதீர் கூட்டம்

Published On 2023-06-24 08:03 GMT   |   Update On 2023-06-24 08:03 GMT
  • முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு-குறைதீர் கூட்டம் நடந்தது.
  • இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் கருத்தரங்கு-குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

முன்னதாக நடக்கும் கருத்தரங்கில் சுயதொழில்களுக்கு வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலு வலர்கள் உரையாற்ற வுள்ளார்கள். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

அதனைத்தொடர்ந்து, நடைபெற உள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரரின் குடும்பத்தி னர்கள் தங்களது குறைக ளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News