உள்ளூர் செய்திகள்

திராவிட மாடல் பயிற்சி கருத்தரங்கம்

Published On 2022-09-05 08:25 GMT   |   Update On 2022-09-05 08:25 GMT
  • காரைக்குடியில் திராவிட மாடல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
  • இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் காரைக்குடியில் திராவிட மாடல் குறித்த பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில், ''திராவிட இயக்க வரலாறு'' என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், ''மாநில சுயாட்சி'' என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாவும் பேசினர்.

மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, சிக்கந்தர் பாதுஷா, பொற்கோ, ரவி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் துஷாந்த் பிரதீப்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News