உள்ளூர் செய்திகள்

நேஷனல் அகாடமி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-23 13:53 IST   |   Update On 2023-09-23 13:53:00 IST
  • திருப்பத்தூரில் நேஷனல் அகாடமி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • சமூக ஆர்வலர் விஸ்டம் கமருதீன் கலந்து கொண்டார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. ஊர்வலத்தை தலைமை அரசு மருத்துவர் சாந்தி தலைமை வகித்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் முன்னிலை வகித்தார். டெங்கு விழிப்புணர்வு பாததைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி அண்ணாசிலை, பேரூந்து நிலையம் வழியாக கோஷமிட்டு காந்தி சிலை சென்று அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணிநாரயணன் நில வேம்பு காசயம் வழங்கினார். துணை சேர்மன்கான் முகமது வரவேற்றார்.

வார்டு கவுன்சிலர்கள் பஷீர் அகமது,சீனிவாசன் சரண்யா ஆகியோர் பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பிரசு ரங்களை வழங்கினர். இதில் மருத்துவர்கள் தமிழ்செல்வன், முத்துகுமார், பாசில், ஆமீனா பாதம், ஆசிரியர்கள் சதக்கத்துல்லா, சிவநேசன், பொன்னுச்சாமி மற்றும் பூவிழி, சாந்தி மோனிஷாா, சமூக ஆர்வலர் விஸ்டம் கமருதீன் கலந்து கொண்டார்.வெங்கடேஷன்நன்றி கூறினார்.

Tags:    

Similar News