உள்ளூர் செய்திகள்

பருவ மழை பொய்த்ததால் கருகி வாடும் பயிர்கள்

Published On 2023-10-07 06:02 GMT   |   Update On 2023-10-07 06:02 GMT
  • பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வாடுகிறது.
  • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேவகோட்டை

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை ஊராட்சியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவ சாயம் நடந்து வருகிறது.

இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பருவ மழையை நம்பி பெரியகாரை பகுதி விவசாயிகள் ஏக்க ருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் களை பயிரிட்டனர்.

ஆனால் காலம் கடந்த பின்பும் பருவ மழை கைகொடுக்கவில்லை. இதனால் வயல்கள் வறண்டு விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் போதிய தண்ணீர் பாய்ச்சாததால் நெற்பயிர் கள் கருகி வாடும் நிலையில் உள்ளன. கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினா லும் போதவில்லை. இதனால் பயிர்கள் கருகி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேவகோட்டை வட்டத்தில் ஒரு சில நபர்களை தவிர பெரும்பாலான விவசாயிக ளுக்கு பயிர் காப்பீட்டு நிவா ரணம் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ள னர். மாவட்ட கலெக்டர் இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டை செய்யலாம் என அறிவித்துள்ள நிலையி லும் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பு பணிகளை இதுவரை அதி காரிகள் மேற்கொள்ள வில்லை.

எனவே வாடும் பயிர்க ளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News