உள்ளூர் செய்திகள்

வானவில் கொண்டாட்டபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2023-11-21 05:35 GMT   |   Update On 2023-11-21 05:35 GMT
  • அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
  • இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து 434 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டியும், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.15 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் பல்வேறு வகையான உபகரணங் களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான வானவில் கொண்டாட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தங்கி படிக்கும் 4 மாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News