உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

பஞ்சாயத்து தலைவர்கள் நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-03-01 14:17 IST   |   Update On 2023-03-01 14:17:00 IST
  • பஞ்சாயத்து தலைவர்கள் நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் தனிகவனம் செலுத்தி அனைத்து திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளையும் துரிதமாக மேற்கொள்வ தற்கான பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.

2021-22-ம் நிதியா ண்டில் மத்திய நிதிக்குழு மானியம், 14-வது நிதிக்குழு மானியம் மற்றும் உபரிநிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சிகள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளது. அந்த ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 445 ஊராட்சி களிலும் 100 சதவீத பணிகளை நிறைவு செய்வ தற்கான நடவடிக்கைகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அவை அடுத்த பணிகளை மேற்கொள்வ தற்கு அடிப்படையாக அமையும்.

ஒவ்வொரு ஊரா ட்சிகளிலும் பள்ளிகள், நூலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஆகி யவைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ஊராட்சிகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையான அரசின் திட்டங்கள் குறித்தும், ஊராட்சி மன்றத்தலைவர்கள் புரிதலுடன் இருக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் குறித்த கையேட்டை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கும் துறைரீதியாக வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு, பிற துறையுடன் ஒருங்கிணைத்து, அதற்கான சேவைகளை வழங்க வேண்டும்.

அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, முழு ஈடுபாடுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News