உள்ளூர் செய்திகள்

சொர்ணவாரீசுவரர் கோவில் தேரோட்டம்

Published On 2023-07-03 13:15 IST   |   Update On 2023-07-03 13:15:00 IST
  • சொர்ணவாரீசுவரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேேராட்டத்தை கண்டு களித்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூரில் பிரசித்தி பெற்ற சொர்ணவாரீசுவரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவலில் கடந்த 26-ந்தேதி ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடங்கிய நாட்களில் இருந்து தினமும் காலை, இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி சொர்ண வாரீசுவரர்-சாந்தநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேேராட்டம் நேற்று நடந்தது. மாலை 4.20 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெரிய ேதரிலும், அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் பக்தி கோஷம் முழங்க ஏராளமானோர் தேரை வலம் பிடித்து இழுத்தனர்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேேராட்டத்தை கண்டு களித்தனர். இரவு தேர் நிலையை அடைந்தது.

Tags:    

Similar News