உள்ளூர் செய்திகள்

தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-10 06:58 GMT   |   Update On 2022-10-10 06:58 GMT
  • நெற்குப்பை பேரூராட்சியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் தீவிர தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் தெளிவுபடுத்தியதோடு, நாள்தோறும் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை முழுமையாக முறையாக தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படியும் சேர்மன் கேட்டுக்கொண்டார். இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வரி தண்டலர் துரைராஜ், கவுன்சிலர் கண்ணன், சேக்கப்பன், மாணவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், 10-வது வார்டு செயலாளர் ரியாஸ் அகமது, 2-வது வார்டு துணை செயலாளர் சேவுகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News