உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.

அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-04 06:46 GMT   |   Update On 2023-09-04 06:46 GMT
  • தேவகோட்டை அருகே ஏழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
  • கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஏழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த சில மாதங்க ளுக்கு முன்பு பாலாலயபூஜை நடத்தப்பட்டு கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சா ரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

முன்னதாக சிவனடியார் கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்க ளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News