உள்ளூர் செய்திகள்

அழகியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-26 13:32 IST   |   Update On 2023-06-26 13:32:00 IST
  • அழகியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டது.

மானாமதுரை

திருப்பாச்சேத்தியில் உள்ள அழகியநாயகி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் காலபூஜை நிறைவடைந்த நிலையில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து அழகிய நாயகி அம்மன் மூலவர் விமானக் கலசம், ராஜகோபுரம் விமானக் கலசங்கள், பரிவார தெய்வங்க ளுக்கு புனிதநீர் ஊற்றி குட முழுக்கு நடந்தது.

கோபுரக் கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அழகிய நாயகி அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் ராஜாங்கம் பிள்ளை, செயலர் சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News