உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி 3 மாடுகள் பலி

Published On 2023-02-07 08:29 GMT   |   Update On 2023-02-07 08:29 GMT
  • வாகனம் மோதி 3 மாடுகள் பலியாகின.
  • விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்

திருப்புத்தூர் அருகே உள்ள புதுகாட்டாம்பூரில் சாலையில் படுத்து கிடந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டுக்கு கொம்பு உடைந்தது.

மற்றொரு மாட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு காயங்களுடன் தப்பித்து ஓடியது. இதனைக்கண்ட அப்பகுதிமக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது நடந்த விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News