உள்ளூர் செய்திகள்

சிக்கல் சிங்காரவேலவர் அன்னையிடம் வேல் வாங்க தயாராக நிற்கும் காட்சி.

சூரனை சம்ஹாரம் செய்ய அன்னையிடம் சக்திவேல் வாங்கிய 'சிங்காரவேலவர்'

Published On 2023-11-18 09:53 GMT   |   Update On 2023-11-18 09:53 GMT
  • முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை நடைபெற்றது.
  • முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது உலகிலேயே எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் பிரசித்திப் பெற்ற சிங்கார வேலவர் கோவில் அமைந்துள்ளது. சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு கூறுகிறது. வேல் வாங்கிய முருகனின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் அற்புதம் உலகிலேயே எங்கும் இல்லாத ஒன்றாகும். இவ்வாறு பல்வேறு சிறப்பு மிக்க கந்த சஷ்டி விழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்காரவேலவர் பவள ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. தெய்வானை, வள்ளி சமேத சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு தேரிலிருந்து இறங்கி சிங்காரவேலவர் கோவிலுக்குள் சென்று, அன்னை வேல்நெடுங் கண்ணியை வணங்கினார்.

பின்னர், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சக்திவேலை வாங்கினார். அப்போது வீர ஆவேசத்தில் சிங்கார வேலவரின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது உலகிலேயே எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு மனமுருகி முருகனை வழிப்பட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 12 மணி யளவில் சிங்கார வேலவருக்கு மஹாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் , 30 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News