உள்ளூர் செய்திகள்
கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி காலை காப்பு கட்டுதலும், மாலை முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.