உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2023-03-09 09:57 GMT   |   Update On 2023-03-09 09:57 GMT
  • ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
  • போலீசார் செந்தூர் பாண்டியன் (29), ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி சென்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ராயக்கோட்டை பாலம் அருகே நடந்து சென்ற போது இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியன் (29), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News