உள்ளூர் செய்திகள்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை:தொழிலாளி சேலம் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-02-16 07:21 GMT   |   Update On 2023-02-16 07:21 GMT
  • வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.
  • அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

ராசிபுரம்:

நாமக்கல் மாட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலி தொழிலாளி.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவரின் 10 மற்றும் 11 வயதுள்ள 2 மகள்களுக்கும், வெள்ளை யன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமி களின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வெள்ளையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News