உள்ளூர் செய்திகள்

தாழையூத்து பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2022-09-03 09:29 GMT   |   Update On 2022-09-03 09:29 GMT
  • நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
  • மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நெல்லை கோட்ட கிராமப்புற செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் அதற்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News