உள்ளூர் செய்திகள்

கோசாலைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்படும் கன்றுகள்.

சாலைகளில் சுற்றிதிரிந்த 4 கன்றுகள் கோசாலைக்கு அனுப்பிவைப்பு

Published On 2023-10-10 09:31 GMT   |   Update On 2023-10-10 09:31 GMT
  • 14 மாடு, கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
  • கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.2ஆயிரம், கன்றுக்கு ரூ.1000 அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

சீர்காழி:

சீர்காழி பிரதான வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றிதிரிந்ததால் போக்கு வரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டுவந்தது.

சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறுத்தலி ன்படி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அதன்படி சுமார் 14 மாடு,கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது. கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு 2ஆயிரமும், கன்றுக்கு ரூ.ஆயிரம் என தங்களது மாடுகளை அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கால்நடை உரிமையாளர்கள் இதுவரை வந்து உரிமைக்கோரி மீட்கப்படாத 1காளை கன்றுக்குட்டி உள்ளிட்ட 4 கன்றுகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் தனி வாகனத்தில் ஏற்றி பாதுகாப்புடன் மயிலாடுதுறை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News