உள்ளூர் செய்திகள்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் திருப்பூருக்கு அனுப்பி வைப்பு

Published On 2023-07-03 09:18 GMT   |   Update On 2023-07-03 09:18 GMT
  • சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
  • நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News