உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்

சாரதா கல்லூரியில் கருத்தரங்கம்

Published On 2023-03-18 09:25 GMT   |   Update On 2023-03-18 09:25 GMT
  • இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார்.
  • இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள்.

நெல்லை:

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை ஒமேகா மன்றம் சார்பில் 'இயற்பியலில் இன்றைய வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

மதுரை விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் கணேசன் 'நானோ தொழில்நுட்பம் குறித்தும், மதுரை பாத்திமா கல்லூரி உதவி பேராசிரியர் ஷீலா விமாலா மருத்துவ இயற்பியல் பற்றியும், லண்டனில் உள்ள நியூட்டன் இன்டர்நேஷனல் பெல்லொவ் முனைவர் லோகு திருமலைசாமி, குறைமின் கடத்திகளில் எக்ஸ் கதிர்கள் தாக்கங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள். ஸ்ரீசாரதா கல்வி குழுமங்களின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வாழ்த்தி பேசினார். உதவி பேராசிரியை சவுபாக்கியவதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முத்துராணி மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News