உள்ளூர் செய்திகள்

இ-நாம் செயலி மூலம் தேங்காய் விற்பனை

Published On 2023-02-15 15:20 IST   |   Update On 2023-02-15 15:20:00 IST
  • மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் (இ.நாம்) நேற்று முதன் முறையாக தேங்காய் ஏலம் நடைபெற்றது.
  • நேற்று நடைபெற்ற ஏலத்தில் 951 கிலோ தேங்காய் ரூ.22,470-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் (இ.நாம்) நேற்று முதன் முறையாக தேங்காய் ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 951 கிலோ தேங்காய் ரூ.22,470-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.00- க்கும், சராசரியாக ரூ.24.00-க்கும் விற்பனையானது.

நேற்று தேங்காய் ஏலம் தேசிய வேளாண் சந்தை( இ-நாம்) மூலம் நடைபெற்றதால், விளைபொருளுக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற தேங்காய் ஏலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வாரந்தோறும் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை இ- நாம் செயலி மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண் விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News