உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-11-04 09:12 GMT   |   Update On 2022-11-04 09:12 GMT
  • ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரின் வீட்டில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்.
  • அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் கதிரேசன்.

இவர்கள் 2 பேரின் வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக தென்காசி மாவட்ட பறக்கும் படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு இருவர் வீட்டிலும் 2 டன் அளவுள்ள ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Tags:    

Similar News