உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம்: கரையோர கட்டிடங்களை தாக்கும் கடல்நீர்
- கடற்கரை ஓரங்களில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உருவாகி வருகிறது.
- கட்டிடங்கள் கடல்நீரால் சேதமடையாமல் இருக்க ஏற்கனவே கருங்கற்கள் போடப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் இருந்தே விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலைகள் வேகமாக எழுந்ததால் கடற்கரை ஓரங்களில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உருவாகி வருகிறது.
கடலோரத்தில் இருக்கும் கட்டிடங்கள் கடல்நீரால் சேதமடையாமல் இருக்க ஏற்கனவே, கட்டிடங்கள் அருகில் கருங்கற்கள் போடப்பட்டது. இன்று அதையும் தாண்டி அலைகள் மோதின.
இதுபோன்று கடல் சீற்றங்களால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் தூண்டில் வளைவு கட்ட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.