உள்ளூர் செய்திகள்

பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

Published On 2022-06-29 09:49 GMT   |   Update On 2022-06-29 09:49 GMT
  • சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
  • தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, வடமலம்பட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார்.

இதில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பிரபாகரன் தலை மையிலான குழுவினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News