உள்ளூர் செய்திகள் (District)

பூச்சி உருண்டையை விழுங்கிய பள்ளி மாணவன் சாவு

Published On 2023-06-25 09:23 GMT   |   Update On 2023-06-25 09:23 GMT
  • பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.
  • சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் பாவண்ணன் (வயது16). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே அரசம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.

உடனே அந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News