உள்ளூர் செய்திகள்

திருமணமான இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி மாணவன் கைது

Published On 2023-09-09 15:27 IST   |   Update On 2023-09-09 15:27:00 IST
  • மாணவன் பள்ளிக்கு செல்லாத நிலை யில் வீட்டில் இருந்து வந்தார்.
  • மாணவன் அர்த்திகாவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

சூளகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கடத்துர் கிராமத்தை சேர்ந்தவர் அணில்குமார் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அர்த்திகா (20)என்ற மனைவியும் மற்றும் 6 மாத கை குழந்தையும் உள்ளது.

அணில்குமார் தினமும் காலை வேலைக்கு சென்றால் மாலையில் வீடு திரும்புவார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர் பேரிகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்து பின்பு பள்ளிக்கு செல்லாத நிலை யில் வீட்டில் இருந்து வந்தார். அர்த்திகா வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மாணவன், அங்கு சென்று அர்த்திகாவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இது குறித்து அர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் மாணவனை கைது செய்த னர். இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News