உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-09-08 15:34 IST   |   Update On 2022-09-08 15:34:00 IST
  • அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மகள் கவுசிகா (வயது 14). இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.

அவரது வீட்டினர் திடீரென்று வீட்டைத் திறந்து பார்த்தபோது துடிதுடித்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் இந்த பள்ளியில் பிரச்சினையா? அல்லது வீட்டில் குடும்பப் பிரச்சினையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News