உள்ளூர் செய்திகள்

கனமழைக்கு இடிந்து தரைமட்டமான வீடுகள்.

திண்டுக்கல்லில் கனமழைக்கு 3 தூய்மை பணியாளர்கள் வீடுகள் இடிந்து சேதம்

Published On 2022-11-10 12:46 IST   |   Update On 2022-11-10 12:46:00 IST
  • கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் வீட்டுச்சுவர் பலமிழந்து காணப்பட்டது
  • 3 தூய்மை பணியாளர்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி 28-வது வார்டு நெட்டு த்தெரு முனிசிபல் காலனி யில் தூய்மைப்பணி யாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 70 ஆண்டுக ளுக்கு முன்பாக நகராட்சி சார்பில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிதிலமடைந்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் வீட்டுச்சுவர் பலமிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் முனிசிபல் காலனியை சேர்ந்த காளியப்பன்,லட்சுமணன் உள்பட 3 தூய்மை பணியாளர்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

அப்போது வீட்டில் இருந்த காளியப்பன் மற்றும் லட்சுமணன் குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி யதால் காயமின்றி உயிர்தப்பி னர். இருந்தபோதும் வீடுகள் இடிந்து சேதமடைந்ததால் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News