உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி

Published On 2023-10-03 08:54 GMT   |   Update On 2023-10-03 08:54 GMT
  • சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
  • விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

செங்கோட்டை:

செங்கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கணக்கபிள்ளைவலசை வாரியர் சமுகத்திற்கு பாத்தியப்பட்ட சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகயில் உள்ள சிவபிள்ளையார் கோவில், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கோட்டை பால விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News