உள்ளூர் செய்திகள்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொது விருந்து நடைபெற்ற காட்சி.

ஆழ்வார்திருநகரி, குரங்கணி கோவில்களில் சமபந்தி பொதுவிருந்து

Published On 2023-08-16 09:39 GMT   |   Update On 2023-08-16 09:39 GMT
  • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • இதில் குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்திருப்பேரை:

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொதுவிருந்து நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணைத் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். அதே போன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News