உள்ளூர் செய்திகள்

சேலம் ரெயில் தண்டவாளத்தில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-09-22 15:09 IST   |   Update On 2023-09-22 15:09:00 IST
  • பிரபல ரவுடியான பல்சர்குமார் மீது 12 வழக்குகள் உள்ளன.
  • கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

சேலம்

சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

சரமாரி வெட்டு

இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்றிரவு மது குடித்து கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை 4 பேரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர்.பலத்த காயத்துடன் அலறிய படி வெளியில் ஓடி வந்த பல்சர் குமார் அதிர்ச்சி யில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போ னில் அழைத்தார். அதன்பே ரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு ெதாடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வி சாரணை நடத்தினர். இதில் பல்சர்குமா ரின் நண்பர்களான ஜாபர் , சித்தேஷ், பிரகாஷ், மணி ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தேடுதல் வேட்டை

மேலும் அவர்கள் திட்ட மிட்டு அழைத்து வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனரா? அல்லது திடீரென மோதல் ஏற்பட்டு இந்த தாக்குதல் நடந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரையும் போலீசார் தேடிய போது அவர்கள் தலைமறை வானது தெரிய வந்தது.தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமை யிலான தனிப்படை போலீ சார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News