உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் இளைஞர்கள் எழுதிய ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுக்கான இறுதி விடைகள் பதிவேற்றம்

Published On 2022-08-18 10:52 GMT   |   Update On 2022-08-18 10:52 GMT
  • இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.
  • பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.

சேலம்:

இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்

ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு - 2021 -க்கான தாள்-1 எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது.

மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்-சி, டி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான இந்த தேர்வை நாடு முழுவதும் பல லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினார்கள். அதுபோல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர்.

விடைகள் பதிவேற்றம்

தேர்வு முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக, மற்றும் தேர்வர்களின் நலன் கருதி, ஆணையம் இறுதி விடைகள் பதிவை பதிவேற்றம் செய்துள்ளது

விண்ணப்ப தாரர்கள் வினாத்தாள் மற்றும் தங்களுக்குரிய இறுதி விடையை பிரிண்ட் அவுட் எடுக்கலாம். இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்

அதாவது 16.08.2022 முதல் 15.09.2022 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News