சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை தலைமை பொறியாளர் ஆய்வு செய்த காட்சி.
சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையைதலைமை பொறியாளர் ஆய்வு
- நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சாலை பராமரிப்பு, தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-22 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைபணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்து றையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார்.
சாலை பராமரிப்பு, தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி எல்லையில் அமைக்கப்படும் சாலைகள் அனைத்தையும் மழைநீர் வடிகாலுடன் எல்லை வரை அமைக்குமாறும், அனைத்து சாலை பணிகளையும் இந்த நிதியாண்டில் முடித்து
பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டுவர அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, தரக்கட்டுபாடு கோட்ட பொறியாளர் முருகன், உதவிக் கோட்டப் பொறியாளர் சந்தோஷ்குமார், உதவிப் பொறியாளர் சுமதி மற்றும் தரக்கட்டுபாடு உதவிப் பொறியாளர் பிருந்தா ஆகியோர் உடனிருந்தனர்.