உள்ளூர் செய்திகள்

சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர்உள்பட 12 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

Published On 2023-02-21 14:59 IST   |   Update On 2023-02-21 14:59:00 IST
  • காவல் துறையில் 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும், உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
  • சேலம் மாநகரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்-டிவிசன் டி.எஸ்.பி. ஆகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நிலவழகன் , சூரமங்கலம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம்:

தமிழக காவல் துறையில் 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும், உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்-டிவிசன் டி.எஸ்.பி. ஆகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நிலவழகன் , சூரமங்கலம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஆத்தூரில் பணியாற்றிய டி.எஸ்.பி. ராமச்சந்திரன், விழுப்புரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கணேஷ்குமார் திரு வள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று ஊத்துக்கோட்டை, வேலூர், திருவள்ளூர், கோவை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், உதவி கமிஷனர்கள் என மொத்தம் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News