உள்ளூர் செய்திகள்

சேலத்தில் தீக்குளிக்க முயன்றவர் மாரடைப்பால் பலி

Published On 2023-02-07 14:56 IST   |   Update On 2023-02-07 14:56:00 IST
  • சேலத்தில் கோரிக்கை மனு கொடுக்கவந்த தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.
  • அவரை போலீசார் காப்பாற்றிய நிலையில் மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் இறந்தார்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை பெரியகிணறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த போலீசார், அவர் தீக்குளிக்கும் முன் உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணை நடத்தியதில் சுப்பிரமணிக்கு யசோதா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுப்பிரமணி தனது மனைவி மற்றும் மகள் பெயரில் வலசையூரில் 900 சதுரடி நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கணவரை பிரிந்து யசோதா தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

இதனால் சொத்தில் தனது பங்கை கேட்டு சுப்பிரமணி, யசோதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் சண்டை போட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சுப்பிரமணி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News