உள்ளூர் செய்திகள்

நெய்யமலை விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி பயிற்சி

Published On 2023-09-28 08:38 GMT   |   Update On 2023-09-28 08:38 GMT
  • 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.
  • இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணை பேராசிரியர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திக், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் விவசாயிகளுக்கு, செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News