உள்ளூர் செய்திகள்

பிரதமரின் விவசாய உதவித்தொகை: கூடுதலாக 63 ஆயிரம் பேர் சேர்ப்பு

Published On 2023-07-14 15:06 IST   |   Update On 2023-07-14 15:06:00 IST
  • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சேலம்:

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கென தனி இணைய தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், முறையான ஆவணங்களு டன் விண்ணப்பிப்பவர் களுக்கு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 48.9 லட்சம் விவசாயிகள் உதவித்தொகை கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால் 13-வது தவணை யில் 20.29 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைத்தது. ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால் தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 14-வது தவணை உதவித்தொகை வருகிற 30-ந்தேதி மத்திய அரசு விடுவிக்க உள்ளது. இந்த தவணையில் தமிழகத்தை சேர்ந்த 63,233 விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில்...

பிரதம மந்திரியின் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News