சுப முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
- கோவில் கும்பாபிஷே கங்கள், திருமண சுப முகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
- இந்நிலை யில், நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், செல்லப்பம்பாளையம், நகப்பாளையம், அய்யம்பா ளையம், ஆனங்கூர், சின்ன மருதூர், பெரிய மருதூர், கபிலர்மலை, தண்ணீர் பந்தல், பரமத்திவேலூர், பர மத்தி, மோகனூர், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம், நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, காக்கட்டான், செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
பூக்கள் பறிக்கும் தருவா யில் வரும்போது ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிக ளுக்கு வரும் வியா பாரிக ளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். பூக்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்க ளைச் சேர்ந்த பூ வியாபாரி கள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைக ளாகவும், தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்து வருகின்ற னர். அதேபோல் சில வியா பாரிகள் உதி ரிப்பூக்களை பாக்கெட்டுகளாக போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கோவில் திருவிழா, திரு மண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது. பூக்களின் விற்பனை உச்சத்தில் இருப்பது வாடிக்கை. மற்ற காலங்க ளில் அதன் விலை குறைந்து காணப்படும். அதன்படி, ஒவ்வொரு வாரமும் பூக்க ளின் விலை அதிகரிப்பது, குறைவது என மாறி மாறி இருந்து வருகிறது.
கோவில் கும்பாபிஷே கங்கள், திருமண சுப முகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இந்நிலை யில், நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம் ரூ.350-க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி, நேற்று கிலோ, ரூ.600 விற்பனை யானது. ரூ.300-க்கு விற்பனையான முல்லைப் பூ நேற்று ரூ.600-க்கு விற்பனையானது. ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி, ரூ.170-க்கு விற்பனையானது. ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி, நேற்று ஒரு கிலோ, ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.150-க்கு விற்பனையான ரோஜா ரூ.250-க்கு விற்பனை யானது. இதேபோல் ரூ.180-க்கு விற்பனையான செவ்வந்தி, ரூ.280-க்கு விற்ப னையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ள தால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.