உள்ளூர் செய்திகள்

வீட்டு வாசலில் இருந்த காலணியை தள்ளிவிட்டதை தட்டி கேட்ட பெண்ணுக்கு கத்திகுத்து

Published On 2023-10-09 15:01 IST   |   Update On 2023-10-09 15:01:00 IST
  • ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.
  • ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர்.

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News