உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்து சென்ற வாலிபர்

Published On 2023-06-13 08:09 GMT   |   Update On 2023-06-13 08:09 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
  • அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

சேலம்:

சேலம் மாமாங்கம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

இவரது மனைவி விஜயா (வயது 53), மாளிகை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.

அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து விஜயா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி காமிராவை ஆய்வு செய்தனர். அதில், வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது.

அதனை வைத்து விசாரித்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த விஜயகுமாருடையது என்பதும், அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என ஏற்கனவே பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது.

விஜயகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்த அந்த வாலிபர், விஜயாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News