உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை தொடங்கியது சேலம் கோட்டை மாரியம்மன் தங்கரத புறப்பாடு

Published On 2023-10-28 07:47 GMT   |   Update On 2023-10-28 07:47 GMT
  • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்குகிறது.

சேலம்:

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.5.10 கோடியில் திருப்பணிகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதற் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி யது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

கும்பாபிஷேக விழா

நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர் நேரு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற கோட்டை மாரியம்மன் தங்க தேரோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்கு கிறது. அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் - செல்வி சார்பில் கோட்டை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் சாமி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News