உள்ளூர் செய்திகள்

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.7லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-09-13 09:31 GMT   |   Update On 2023-09-13 09:31 GMT
  • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
  • பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

எடப்பாடி:

கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,525 முதல் ரூ.7,777 வரை விற்பனையானது. இதேபோல் இரண்டாம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.4,300 முதல் ரூ.7,325 வரை விலை போனது. காங்கேயம், தாராபுரம், ஊத்துக்குளி, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பினை அதிக அளவில் மொத்த கொள்முதல் செய்தனர்.

Tags:    

Similar News