உள்ளூர் செய்திகள்
சேலம் அரிசிபாளையத்தில் மாமனார், மாமியாைர் வெட்டிய ரவுடி கைது
- பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
- ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு மோனிஷா கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் அண்ணாதுரை வீட்டிற்கு பிரபாகரன் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று பிரபாகரன் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.