உள்ளூர் செய்திகள்
மாவட்டத்தில் தொடர் மழை ஆணைமடுவு பகுதியில் 5 மி.மீ. பதிவு
- சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலை நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
ஆணைமடுவு - 5, ஏற்காடு-2.8, கடையாம்பட்டி-1, சேலம் - 0.3 என மொத்தமாக 9.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.