உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு திட்டத்தில் 32,413 பேருக்கு அடிப்படை கல்வி

Published On 2023-07-06 15:04 IST   |   Update On 2023-07-06 15:04:00 IST
  • புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் (2022-2027) அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக புதிய பாரத எழுத்தறி வுத்திட்டம் (2022-2027) அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் 10,694 ஆண்கள், 21,710 பெண்கள், 9 திருநங்கைகள் என மொத்தம் 32,413 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எஸ்.சி.பிரிவை சேர்ந்த 6,485 பேரும், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 358 பேரும், சிறுபான்மையினர் 3,882 பேரும், பொதுப்பிரி வினர் 21,688 பேரும் அடங்குவர்.

முதற்கட்டமாக மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களை சார்ந்த நகர்ப்புற, மற்றும் கிரா மப்புற குடியிருப்பு பகுதி களில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோ ருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை இம்மாதம் 3-வது வாரத்தில் முடிக்க ஆசிரியகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News